Posts

இரத்த சோகை போக்க...! உடல் பருமனை குறைக்கும் தக்காளி...!

Image
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் , இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் உடலில் இருந்தாலும் அவற்றை வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த் தடுப்பு வைட்டமின் ‘ சி ’ அதிகமாய் இருக்கிறது. சிறு நீர் எரிச்சல் , மேக நோய் , உடலில் வீக்கம் , உடல் பருமன் , நீரிழிவு , குடல் கோளாறுகள் , கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேலும் இந்த வித நோய் உள்ளவர்கள் 5,6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும், நாக்கு வறட்சியும் அகலும், உடலும் மினுமினுப்பாய் இருக்கும். மேலும் 100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20 தான். எனவே எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின் ‘ சி ’, வைட்டமின் ‘ ஏ ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.   உ

வெயில் தாக்குதலில் உடலை காக்க இளநீர் சாப்பிடுங்க....!

Image
இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இருதயம் , கல்லீரல் , சிறுநீரகம் , கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள் , நாட்பட்டசீதபேதி , ரத்த பேதி , கருப்பை ரணம் , குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை , உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. பேதி , மயக்கம் , அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது 1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். நீர்க்கடுப்பு மே , ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல் , கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர , 5 நாளில் அவை நீங்கும். உடம

இயற்கை மருத்துவம்

சீத்தாப் பழத்தில் மறைந்துள்ள மருத்துவ நன்மைகள் - இயற்கை மருத்துவம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும். சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள தசைப்பகுதி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படிய ...

வள்ளலாரின் அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே. 2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே. 3. வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே. 4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே. 5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே. 6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே. 7. குருவை வணங்கக் கூசி நிற்காதே. 8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே. 9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே. 10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

Image
சித்த மருத்துவ அடிப்படைகள்:- இந்த அடிப்படையை தெரிந்துக்கொண்டால் சித்த மருத்துவத்தில் மற்றவைகள் எளிதில் விளங்கும். 1 அவுன்சு : 30 மில்லி லிட்டர் 1/4 ரூபாய் எடை : சுமார் 3 கிராம். 1 குன்றி எடை : 200 மி.கி. 1 ரூபாய் எடை : 10 கிராம் இலைக் கற்கம் : இலையுடன் நீர் விட்டு அரைத்த பசை. சமூலம் : வேர், இலை, பூ, காய் போன்ற அனைத்தும் சேர்ந்தது. சூரணம் : நன்றாக தூள் செய்து, ஒரு மெல்லிய துணியால் சலித்து எடுத்த பொடி. பற்பம் : மருந்து சரக்கை ஓடுகளில் வைத்து ஈர மண் தடவிய சுற்றி வரட்டி வைத்து புடமிட்டு செய்த பொடி. ( ஆயுட் காலம் : 100 ஆண்டுகள்) இந்த முறை தான் புடம் எனப்படும். கியாழம் : சேர்க்க வேண்டிய பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி மூன்றில் ஒரு பங்காக குறைத்து வடிக்கட்டி எடுத்தது. கல்வம் : மருந்து அரைக்கும் கல். ( இதில் நன்னி கல் தான் சிறந்தது என்று அகத்தியர் சொல்லி இருக்கார்.) சுத்திசெய்தல் : மருந்துகளில் உள்ள நச்சுகளை நீக்குதல், மருந்துகளை சுத்தம் செய்தல், தரமான மருந்துகளை எடுத்தல் இதற்கு சுத்திகரணம் என்றும் பெயர். மேலும் பயணிப்போம் . .

புலிக்கால் முனிவர்

காலத்திலேயே மிகவும் சீரும் சிறப்புமாக திகழ்ந்த சிவாலயங்கள் பல சென்னையில் உள்ளன. அவற்றுள் ஒன்று வடபழனியில் உள்ள ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயம். புலிக்கால் முனிவர், பதஞ்சலி முனிவர் எனும் இரு முனிவர்களால் உருவாக்கப்பட்டு, தினமும் ஆராதிக்கப்பட்ட தொன்மை சிறப ்பு வாய்ந்த தலம் என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஈசன், இந்த முனிவர்களோடு தொடர்பு கொண்டதால், அந்த முனிவர்களின் பெயராலே அழைக்கப்படுகிறார். இதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:- புராணக்காலத்தில் மத்தியந்தினர் என்று ஒரு முனிவர் இருந்தார். இவரது மகன் புலிக்கால் முனிவர். இவருக்கு வியாக்ரபாதர் என்றொரு பெயரும் உண்டு. இவர் புலி போன்ற உடல் அமைப்பைக் கொண்டவர். இதனால் மரங்களில் ஏறி எளிதாக பூக்களை பறித்து வந்து, இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்கி வந்தார். சென்னை மண்டலத்தில் இவர் வசித்த பகுதி புலியூர் ஆனது. அந்த பகுதியில் சிறு ஆசிரமம் ஒன்றை புலிக்கால் முனிவர் நிறுவினார். ஆசிரமத்துக்குள் சிறு லிங்கம் ஒன்றை நிறுவி வணங்கி வந்தார். அந்த லிங்கத்துக்கு புலியூருடையார் என்று பெயர் சூட்டப்பட்டது. புலியூரை வி

சிவபுராணம்

சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட, வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன், பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும், கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும், சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும், மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறை, நம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம், அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால் அவன் அருளாலே, அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும், ஓய உரைப்பன்யான் கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய் எண்இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவ