சிவபுராணம்

சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட, வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன், பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும், கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும், சீரோன் கழல்வெல்க
ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும், மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை, நம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம், அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால்
அவன் அருளாலே, அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும், ஓய உரைப்பன்யான்
கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய்
எண்இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்
எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

Comments

Popular posts from this blog

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

இரத்த சோகை போக்க...! உடல் பருமனை குறைக்கும் தக்காளி...!

வெயில் தாக்குதலில் உடலை காக்க இளநீர் சாப்பிடுங்க....!